அரசியலில் மீண்டும் புதிய திருப்புமுனை: மஹிந்தானந்த!!

ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவித்தல் வெளியாகியவுடன் அரசியலில் மிகவும் முக்கிய மாற்றங்கள் இடம்பெறபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்தானந்தா அலுத்கமகே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முக்கிய புள்ளிகள் தங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் எங்களது குழுவினருடன் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் அவரது கட்சியில் இன்னும் காணப்படுகின்றது. அதன் எதிரொலியாகதான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர்” என மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.