அன்புக்குரியவர்களை இறுதியாக பார்க்க காத்திருக்கும் குடும்பத்தினர்!!

எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5  நாட்கள் காத்திருக்க வேண்டும் என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பலரது உடல் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில் பயணிகளின் உடல்களை மீட்கும் நிறுவனம் இவ்விடயத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. உடல்கள் கண்டுபிடிக்க பட்டாலும் அவை கடுமையாக அலங்கோலப்பட்டு காணப்படுவதால் அதனை அடையாளம் காண கூடுதல் காலம் எடுக்கலாம் என நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.