போயிங் ரக விமானங்களுக்கு மலேசியாவும் தடை!!

எத்தியோப்பிய விமான விபத்தையடுத்து போயிங் ரக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு மலேசியாவும் தடை விதித்துள்ளது.


அந்தவகையில் தங்களது வான் எல்லையில் போயிங் 737 மக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.

எத்தியோப்பியாவின் விமான விபத்தையடுத்து சீனா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மெக்ஸிகோ மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் குறித்த போயிங்க் ரகத்தை சேர்ந்த விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது மலேசியாவும் இணைந்துள்ளது.

இந்தோனினேஷியா மற்றும் எதியோப்பியாவுக்கு சொந்தமான இரு போயிங் ரக விமானங்கள் குறுகிய காலத்துக்குள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையிலேயே இந்த தடைவிதிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்விபத்துக்கு முன்னதாக போயிங் 737 மக்ஸ்-8 ரக விமானங்களைக் கொள்வனவுசெய்ய உலகின் பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.