கால அவகாசத்தை நீடிக்கக் கூடாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் !
இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபை மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரிக்கை முன்வைத்து ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பும் கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் கையெழுத்திடாது என்று அறிய முடிகின்றது.
இலங்கை அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றுக்கோ, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கோ பாரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் தரப்புக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கும்வேளை, தற்போது கைவசம் இருக்கின்ற இலங்கை மீதான பன்னாட்டு கண்காணிப்பு மேற்பார்வையைக் கைவிடத் தயாராக இல்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரும் கடிதம் ஒன்றை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்புக்களுக்கு அனுப்புவதற்கு ரெலோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் செயலர் நாயகம் விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தனும் கையெழுத்திடுவார் என்று கூறப்பட்டிருந்தது.
‘அந்தக் கடிதத்தில் இன்னமும் கையெழுத்திடவில்லை. இலங்கை அரசு மீதான பன்னாட்டு மேற்பார்வையையும் நீக்கிவிட்டு என்ன செய்யப் போகின்றோம். பன்னாட்டு மேற்பார்வை தொடரத்தக்கதாக, இலங்கையை கட்டுப்படுத்தக் கூடிய, ஐ.நாவின் உயர் மட்டங்களின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு யாராவது முயன்றால் முழுமையாக அதனை ஆதரிப்போம். அதற்காக பன்னாட்டு மேற்பார்வையை நீடிப்பதை கைவிடச் சொல்ல முடியாது’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இலங்கை அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றுக்கோ, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கோ பாரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் தரப்புக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கும்வேளை, தற்போது கைவசம் இருக்கின்ற இலங்கை மீதான பன்னாட்டு கண்காணிப்பு மேற்பார்வையைக் கைவிடத் தயாராக இல்லை என்று புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரும் கடிதம் ஒன்றை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட தரப்புக்களுக்கு அனுப்புவதற்கு ரெலோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் செயலர் நாயகம் விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தனும் கையெழுத்திடுவார் என்று கூறப்பட்டிருந்தது.
‘அந்தக் கடிதத்தில் இன்னமும் கையெழுத்திடவில்லை. இலங்கை அரசு மீதான பன்னாட்டு மேற்பார்வையையும் நீக்கிவிட்டு என்ன செய்யப் போகின்றோம். பன்னாட்டு மேற்பார்வை தொடரத்தக்கதாக, இலங்கையை கட்டுப்படுத்தக் கூடிய, ஐ.நாவின் உயர் மட்டங்களின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு யாராவது முயன்றால் முழுமையாக அதனை ஆதரிப்போம். அதற்காக பன்னாட்டு மேற்பார்வையை நீடிப்பதை கைவிடச் சொல்ல முடியாது’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை