மீனவர்களின் கைதுக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதான இரண்டு தமிழக மாணவர்களையும் ஏனைய மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


மீனவ சங்கங்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும், குறிப்பாக இரண்டு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவித்து பரீட்சைக்கு தோற்ற இடமளிக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் 37 படகுகள் மீளப்பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
அவற்றுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த விடயங்களை  வலியுறுத்தி நாளையதினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.