பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகர் பதவியேற்றார்!!

பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகரும் திரைப்பட இயக்குநருமான சல்வடோர் டெல் சோலர் பதவியேற்றுள்ளார்.

பெருவின் அதிபர் பதவிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்ட்டின் விஸ்காரா பதவியேற்றதன் பின்னர் பிரதமராகவிருந்த சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் இராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரபல நடிகரும் திரைப்பட இயக்குநருமான சல்வடோர் டெல் சோலர் (வயது-48) புதிய பிரதமராக நேற்று (திங்கட்கிழமை) பதவியேற்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் பெரு நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார்.
இவரது அமைச்சு சபையில் கலாசாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த சல்வடோர் டெல் சோலர், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை 2017 ஆம் ஆண்டில் இராஜினாமா செய்தார்.
சல்வடோர் டெல் சோலரின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.