புதிய அரசாங்கத்தின் தலைவராக மஹிந்தவே செயற்படுவார் – பசில்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தான் செயற்படுவார் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதானது, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்தமைக்கு ஒப்பான செயற்பாடாகும் என்றும் அவர் கூறினார்..https://www.tamilarul.net/


கொழும்பில், இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்..https://www.tamilarul.net/


தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷ தான் நாட்டின் தலைவராக வரவேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். இதனைத் தான் மக்களும் விரும்புகிறார்கள்.

சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமையை இரத்து செய்துதான், ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார்.

அதாவது, தன்னை எதிர்த்த நபரை போட்டியிலிருந்தே நீக்கிவிட்டுத்தான் ஜே.ஆர்.ஜயவர்த்தன களமிறங்கிறார்..https://www.tamilarul.net/


இதுபோன்றதொரு செயற்பாடுதான் இம்முறையும் இடம்பெற்றுள்ளது. 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இவ்வாறானதொரு செயற்பாடுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது..https://www.tamilarul.net/


ஆனால், நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கமானது மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனைத்தான் மக்களும், எமது கட்சியினரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு இணங்க எனக்கோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அரசாங்கமானது, ஒரு கல்லினால் நால்வரைத் தாக்கிவிட்டது..https://www.tamilarul.net/


எவ்வாறாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் இன்னும் இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை“ என குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.