பொன்னாலை வட்டார வீதிகளுக்கு வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன!!

வலி.மேற்கு பிரதேச சபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட வீதி விளக்குகள் பொன்னாலை வட்டாரத்தில் உள்ள பிரதான 8 இடங்களில் பொருத்தப்பட்டன.


பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை, வெண்கரம் படிப்பகம்
ஆகியவற்றுக்கு முன்பாகவும்  பொன்னாலைச் சந்தி மற்றும் இருள் சூழ்ந்த கரையோர வீதியிலும்  இவை பொருத்தப்பட்டன. கடந்த திங்கட்கிழமை மேற்படி வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன.

ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் வீதிகளுக்கு பொருத்துவதற்காக ஒவ்வொன்றும் 50ற மின்சக்தியில் இயங்கும் 8 டுநுனு வீதி விளக்குகள் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த விளக்குகளே பொன்னாலையில் பொருத்தப்பட்டன.

எனினும், பொன்னாலை வட்டாரத்தில் உள்ள பல உள்ளக வீதிகள் தொடர்ந்தும் இருளில் மூழ்கி இருக்கின்றன. அங்கு பொருத்துவதற்கு என மேலும் 14 வீதி விளக்குள் சபை நிதியால் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.