சிலாவத்துறை மண்மீட்புப் போராட்டத்துக்கு முசலி பிரதேச சபை ஆதரவுத் தீர்மானம்!!

மன்னார், சிலாவத்துறை மண் மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்பிலிருந்து கடற்படையினர் வெளியேற வேண்டுமெனக் கோரி முசலி  பிரதேச சபை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.


முசலி  பிரதேச சபையின் 13 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றபோதே இந்த தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள முசலி பிரதேச சபையின் உப காரியாலயத்தையும் விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து அரச உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய சபை அமர்வு முடிவடைந்ததும் தவிசாளர், துணைத் தவிசாளர், உறுப்பினர்கள் அனைவரும் போராட்ட களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்ததுடன் போராட்டச் செலவுக்காக சிறு தொகைப் பணத்தையும் வழங்கியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.