தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் அ. ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஜனவரி 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான நிலையில் இராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் காங்கேசன்துறை பொலிஸ் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து எட்டு மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி ஆகியோரின் கல்வியை கருத்திற்கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டர்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.