தீவிரவாதி மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்!!

அமைதியை விரும்புகின்றீர்கள் என்றால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால் விடுத்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதனைக் கூறினார்.

மேலும் தெரிவித்த அவர், “பாகிஸ்தானை தீவிரவாத அமைப்புகள் இல்லாத நாடாக மாற்றினால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும், சுமூகமான சூழலை உருவாக்கிக்கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எனினும், தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை சாத்தியம்.

பிரதமர் இம்ரான்கான் பெருந்தன்மையானவர், அமைதியை விரும்புகின்றவர் என்று சிலர் சொல்கின்றார்கள். உண்மையிலேயே அவர் அமைதியை விரும்புகின்றவராக இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் இம்ரான் கான் ஒப்படைக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.