17 மாதங்களுக்குப் பிறகு மோதும் ரோஜர் ஃபெடரர் - நடால்!

பி.என்.பி பரிபாஸ் ஓப்பன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் அரை இறுதிப் போட்டியில், முன்னணி வீரர்கள் ரோஜர் ஃபெடரர் - ரபேல் நடால் மோதுகின்றனர்.
     2017-ம் ஆண்டு, ஷாங்காய் மாஸ்டர் இறுதிப் போட்டியில் 6-4, 6-3 என்ற நடாலை வீழ்த்திய ஃபெடரர், சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார். 17 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஃபெடரர் - நடால் போட்டி, டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஃபெடரர் - நடால் மோதியுள்ள 38 போட்டிகளில், நடால் 23 முறையும், பெடரர் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையேயான கடைசி ஐந்து போட்டிகளில் ஃபெடரர் வெற்றிபெற்றிருப்பதால், இந்தப் போட்டி சவாலானதாக இருக்கக்கூடும்.

“கடைசி ஐந்து போட்டிகளை வென்றிருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இத்தனை மாத இடைவெளியில், விளையாடும் முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நடாலை எதிர்கொள்வது எப்போதுமே சவாலானது. மீண்டும் ஒரு அரை இறுதியில் நடாலை சந்திக்க காத்திருக்கிறேன்” என்றார் ஃபெடரர். பி.என்.பி பரிபாஸ் ஓப்பன் தொடரைப் பொறுத்தவரை, அதிக முறை (8) சாம்பியன் பட்டம் வென்றவர்களில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச்சும், ஃபெடரரும் முதல் இடத்தில் உள்ளனர். நடால், மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஹெட்-டு-ஹெட் போட்டி கணக்கின்படி நடால் முன்னிலையிலும், பி.என்.பி பரிபாஸ் தொடர் வெற்றிகளின்படி ஃபெடரர் முன்னிலையிலும் இருக்க, இந்த அரை இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. மார்ச் 17-ம் தேதி இரவு 12.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.