திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா!

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா இன்று  காலை (20.03.2019 )வெகு சிறப்பாக பக்திபூர்வமாக அம்பாள் சன்நிதிதானத்தில் இடம்பெற்றது.பத்தர்கள் ஓம் சத்தி ஓம் சத்தி ஓம் சத்தி .அரோகரா அரோகரா என ஒலித்த வண்ணம் இருந்தது.அம்பாள் இரத்தை நோக்கி செல்கையில் முன்னதாக   விநாயகப் பெருமான்,இரதத்தில் அமர்ந்து பின்  முருகப்பெருமான் தேரில் அடுத்தாக அமர்ந்து பவனிவர, அம்பாள் இரதத்தில் வீதி உலா வரும் காட்சி அற்புதமாகவும் புதுமையாகவும் அடியவர்களுக்கு அருள் புரிந்தாள்.பல்லாயிரக் கணக்கான பத்த கொடிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.