துருக்கியின் அதிருப்திக்கு நியூசிலாந்து நடவடிக்கை!!
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 50 பேரை கொலை செய்த நபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் துருக்கி நடவடிக்கை எடுக்கும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்திருந்தார்.
தாக்குதல் குறித்து நியூசிலாந்து கடும் விசாரணை நடத்தி வரும் நிலையில் துருக்கி ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வெளியுறவு துறை அமைச்சரை துருக்கிக்கு விஜயம் மேற்கொள்ளப் பணித்துள்ளார்.
துருக்கி செல்லும் நியூசிலாந்தின் அமைச்சர் பீட்டர் தகுந்த முறையில் செயற்படுவார் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிஸ்டசர்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் அவுஸ்ரேலிய நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் 43 நாட்கள் துருக்கியில் இருந்துள்ளதோடு துருக்கி ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி குறித்த பயங்கரவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேற்கத்தேய நாடுகளிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
எனினும் எதிர்வரும் 31 ஆம் திகதி துருக்கியில் நடைபெறவுள்ள தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவே துருக்கி ஜனாதிபதி இவ்வாறு பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை