கிழக்கில் காணிகள் விடுப்பு!!

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன.

காணிகளைக் கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது இராணுவ பாதுகாப்பு நோக்கத்துக்காக பயன்படுத்தி வந்த 5.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. குறித்த காணிகள் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டன.
அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி மற்றும் திரியாய் பகுதிகளில் 3 ஏக்கர் காணியும், அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவனையில் 0.5 ஏக்கர் காணியும், திருக்கோவில் பகுதியில் 2 ஏக்கர் காணியும் அடங்கலாக மொத்தமாக 5.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவ தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.