நியூசிலாந்தில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த பிரதமர் ஜெசிந்தா உத்தரவு!!

நியூசிலாந்து தாக்குதல்கள் குறித்து உயர்மட்ட விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு நீதித்துறைக் குழு ஒன்றை அமைக்குமாறு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உத்தரவிட்டுள்ளார்.


நியூசிலாந்தில் வகுக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ் பக்க சார்பற்றதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதோடு இனவாதத்தை தூண்டும் வகையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் அமைதியின்மை நிலவி வருகிறது.

இதனால் சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நியூசிலாந்து நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ஜெசிந்தா முனைப்புடன் செயற்பட்டு வருகிறார். இப்படியொரு தீவிரவாதம் எவ்வாறு உருவானது என்பதும் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதும் இந்த விசாரணை முடிவுகள் மூலம் எதிர்காலத்தில் மக்களை பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இதேவேளை விசாரணையில் குற்றப்புலனாய்வு துறையும் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.