காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவேன்-நாம் தமிழர் கட்சி சுபாஷிணி!

காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷிணி  பேசியுள்ளார்.



மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுபாஷினி அறிமுக கூட்டம் காந்தியடிகள் சாலையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய சுபாஷிணி, ' டெல்டா மாவட்டத்தில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மக்களவையில் போராடுவேன். காவிரி படுகையில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரப்பட்டு குறைந்து வரும் நீர்மட்டத்தை உயர்த்துவேன். நாம் தமிழர் கட்சியின் கொள்கையான கல்வி, நீர், மருத்துவத்தை இலவசமாக அனைவருக்கும் வழங்க என்ற உறுதிமொழியை  உறுதி அளிக்கிறேன்.டெல்டா மாவட்டத்தில் நெசவாளர்கள்  தொழில்கள் அழிந்து வரும் சூழலில் தற்போது திருப்பூர் போன்ற பகுதியில் வேலைக்கு செல்லும் நெசவாளர்களை மீண்டும் அவர்களது வாழ்வில்  வசந்தம் ஏற்படும் அளவில் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பேன். ஏழை எளிய விவசாய மக்களுக்கு பொருளாதார மேம்பாடு அடைய அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்' என அவர் பேசினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.