ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வருகிறார் மலிங்கா!

நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகிறார் மின்னல் வேகப்பந்து வீச்சாளார் லசித் மலிங்கா.


ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் திருவிழாவின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதுவரை 5 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஆனால், ஐ.பி.எல் தொடரில் 3 முறை கோப்பையை வென்றுள்ள பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.முன்னதாக, மும்பை அணியின் மூத்த மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, முதல் 6 லீக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பிசிசிஐ கடும் அதிருப்தியை தெரிவித்தது.

நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் தவித்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இலங்கையில் இருந்து வருகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட இருக்கும் அடுத்த போட்டியிலேயே மலிங்கா இணைய உள்ளார். அவரது வருகை அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். அடுத்த 3 போட்டிகளில் விளையாடும் மலிங்கா மீண்டும் இலங்கை திரும்புவார் என கூறப்படுகிறது. நாளை நடைபெறும் போட்டியில் மும்பை அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.