பொள்ளாச்சி வழக்கில் அரசியல் தலையீடு-பார் நாகராஜ்!!
போலீசார் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாகவும், எந்த சமயத்தில் அழைத்தாலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் சிபிசிஐடி முன் ஆஜரான பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் மற்றும் திமுக பிரமுகரான தென்றல் மணிமாறன் ஆகிய இருவருக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து பார் நாகராஜ் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
சுமார் நான்கரை மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியில் வந்த நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசும் போது, போலீசார் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாகவும் எந்த சமயத்தில் அழைத்தாலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு உள்ளதாகவும், தொழில் ரீதியாகவும் தனக்குள்ள பிரச்னைகள் குறித்தும் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், போலீஸ் விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து கூற முடியாது எனவும், தனக்கு தெரிந்த தகவல்களை கூறியுள்ளதாகவும் பார் நாகராஜ் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் மற்றும் திமுக பிரமுகரான தென்றல் மணிமாறன் ஆகிய இருவருக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து பார் நாகராஜ் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
சுமார் நான்கரை மணி நேர விசாரணைக்கு பின்னர் வெளியில் வந்த நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசும் போது, போலீசார் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாகவும் எந்த சமயத்தில் அழைத்தாலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு உள்ளதாகவும், தொழில் ரீதியாகவும் தனக்குள்ள பிரச்னைகள் குறித்தும் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், போலீஸ் விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து கூற முடியாது எனவும், தனக்கு தெரிந்த தகவல்களை கூறியுள்ளதாகவும் பார் நாகராஜ் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை