சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது கதாநாயகியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.
அதன் பின்னர்தான் நாயகி பற்றி அறிவிப்பு வரும் என்கிறது. படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதற்கு முன் வேறொரு கதையை அவரிடம் கூறினேன். அப்போது மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன். தற்போது எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.