கோப்பாய் பகுதியில் பொலிசார் திருடர்கள் மீது வலைவீச்சு!!

கோப்பாய் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை திருடி சென்ற இ ருவா் அந்த மோட்டாா் சைக்களில் சென்று சங்கிலி அறுத்துள்ள நிலையில் குறித்த இரு திருடா்களில் ஒருவரை பொலிஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கைக ளை எடுத்துள்ளதுடன். மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த சில தினங்களு க்கு முன்னர் திருடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் கா வல் நிலையத்தில் முறைப்பாடு     செய்யப்பட்டிருந்தது. அதேவேளை யாழ்.மருத்துவமனை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொ ருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து சென்றனர்.

இச் சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் மானிப்பாய் வீதியிலும்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சங்கிலி ஒன்றினை அறுத்து சென்றனர். குறித்த இரு சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் கபால் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டத னை அடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர். சங்கிலி அறுக்கப்பட்ட இடத்திற்கு அண்மையாக பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி.கமராவின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை அடை யாளம் கண்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , அது கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் என்பதனை கண்டறிந்தனர். தொடர்ந்து காவல்துறையின ; மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து , சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டனர்.

சந்தேக நபர்கள் அளவெட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்ற போது சந்தேக நபர்களில் ஒருவர் தப்பி சென்ற நிலையில் மற்றையவர் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக ளின் பிரகாரம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அத்துடன் வீதிகளில் அறுத்த ஒன்றரை பவுண் மற்றும் இரண்டு பவுண் தங்க சங்கிலிகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கபட்டது.

கைது செய்யபட்ட நபரை காவல்துறையி னர் தமது பாதுகாப்பில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , தப்பிசென் ற மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.