போா்க் குற்றங்களை இராணுவம் செய்தது..! என்னிடம் வீடியோ ஆதாரங்கள்!!

இலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன் சேகா கூறியிருக்கின்றாா்.


கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடி சம்பவத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் தேவையான நேரத்தில் அவற்றை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோதமான நடவடிக்கைகள் சம்பந்தமான காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.