வடக்கில் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்கள் போராட்டம்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வட. மாகாண தொழில்நுட்பவியல் சேவை உத்தியோகத்தர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இப்போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கவனயீர்ப்பு பேரணியொன்றிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஒன்றுதிரண்ட தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்கள், தமது சேவைக்கான தனியான சேவைப் பிரமாணக் குறிப்பை அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாகச் சென்றனர்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றது.
‘நிர்வாகிகளே களக் கொடுப்பனவு மற்றும் பணிக் கொடுப்பனவை தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும்’, ‘6/2016 சுற்றறிக்கைக்கு அமைவாக தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களுக்கான படிகளை வழங்கவும்’, ‘அதிகாரிகளே தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களின் பணியை உறுதிப்படுத்தவும்’, ‘அபிவிருத்திகள் தடைப்படும்?’, ‘தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர்களின் போராட்டம் ஆரம்பம்’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானவர்கள் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.