நடிகை சாய் பல்லவி ஓபன் டாக் என்ன??!

நடிகை சாய் பல்லவி ஒரு விளம்பர படத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதில் மலர் டீச்சராக வலம் வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார்.
 இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாரி 2’ திரைப்படம் அமோகோ வரவேற்பைப் பெற்றது. அதிலும் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் எப்போதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள். மேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது. மேக்கப் போட்டால் நான் வேறு யாரோ போல் தெரிகிறேன் என்று கூறுகிறார்கள். அதனாலேயே நான் படங்களில் மேக்கப் போடுவதில்லை. இயக்குநர்களும் அதை தான் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.