பிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுசரிப்பு!
உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று புனித வெள்ளியை அனுசரித்து வருகின்றனர். ஆசியாவில் அதிகக் கிறிஸ்தவர்களைக் கொண்ட நாடு பிலிப்பைன்ஸ்.
பிலிப்பைன்ஸில் சுமார் 80 மில்லியன் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் புனித வெள்ளியைத் தேவாலயத்தில் அல்லது குடும்பத்துடன் அனுசரிக்கின்றனர்.
இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் கிறிஸ்தவர்களில் சிலர், தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து கொண்டுள்ளனர். குறைந்தது 10 பேர் அவ்வாறு செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கானோர் முள் சாட்டையினால் தங்களையே வருத்திக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை