ஹார்திக் பாண்டியா, ராகுலுக்கு பிசிசிஐ மத்தியஸ்தர் நோட்டீஸ்!!
டிவி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாக பேசியதாக எழுந்த பிரச்னை தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி (ஓய்வு) டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காஃபி வித் கரண் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் தொடர்பாக இருவரும் கூறிய கருத்துகளால் பெரும் சர்ச்சை எழுந்தது. பிசிசிஐ உள்பட பல்வேறு தரப்பினர் இருவரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 2 பேரும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. நிபந்தனையற்ற மன்னிப்பை இருவரும் கோரினாலும், பிசிசிஐ சிஓஏ அவர்களை சஸ்பெண்ட் செய்தது.
இப்பிரச்னை குறித்து விசாரிக்க மத்தியஸ்தரை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ முறையிட்டது. அதுவரை 2 வீரர்கள் மீதான சஸ்பெண்ட் தண்டனையை நிறுத்தி வைத்தது சிஓஏ.
இருவரும் அதன்பின்பு நியூஸி தொடரில் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயினை மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
தற்போது ஐபிஎல் தொடரிலும் ஆடி வரும் அவர்களுக்கு மத்தியஸ்தர் டிகே. ஜெயின் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நேரில் ஆஜராகி இருவரும் விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இயற்கை நீதியின்படி அவர்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என்பதால் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என ஜெயின் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
காஃபி வித் கரண் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் தொடர்பாக இருவரும் கூறிய கருத்துகளால் பெரும் சர்ச்சை எழுந்தது. பிசிசிஐ உள்பட பல்வேறு தரப்பினர் இருவரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 2 பேரும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. நிபந்தனையற்ற மன்னிப்பை இருவரும் கோரினாலும், பிசிசிஐ சிஓஏ அவர்களை சஸ்பெண்ட் செய்தது.
இப்பிரச்னை குறித்து விசாரிக்க மத்தியஸ்தரை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ முறையிட்டது. அதுவரை 2 வீரர்கள் மீதான சஸ்பெண்ட் தண்டனையை நிறுத்தி வைத்தது சிஓஏ.
இருவரும் அதன்பின்பு நியூஸி தொடரில் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி டிகே.ஜெயினை மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
தற்போது ஐபிஎல் தொடரிலும் ஆடி வரும் அவர்களுக்கு மத்தியஸ்தர் டிகே. ஜெயின் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நேரில் ஆஜராகி இருவரும் விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இயற்கை நீதியின்படி அவர்கள் தரப்பையும் கேட்க வேண்டும் என்பதால் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என ஜெயின் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை