பனியால் பேட்டிங் எளிதாக இருந்தது: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி!!

சேப்பாக்கம் மைதானத்தில் பரவி இருந்த பனியால் பேட்டிங் எளிதாக அமைந்தது என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய சென்னை அணி 27/3 என இக்கட்டான நிலையில் இருந்த போது, தோனி 75 அபார ஆட்டத்தால் 175 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 167/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதுதொடர்பாக தோனி கூறியதாவது:
விக்கெட்டுகளை துரிதமாக இழந்த நிலையில் வீரர்கள் இணைந்து ஆடுவதே மிகுந்த தேவையாக இருந்தது. மைதானத்தில் பனி பரவி இருந்ததே அறிந்தோம். இதனால் பேட்டிங் எளிதாக இருந்தது. கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றோம். எதிரணியில் ஏராளமான இடதுகை வீரர்கள் இருந்ததால் நாங்களும் இடதுகை பந்து வீச்சாளர் மிச்செல் சான்ட்நரை களமிறக்கினோம். ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் மேலும் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும்.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மிகவும் ஊக்கத்தை தந்தது என்றார் தோனி.
கடைசி 5 ஓவர்களால் தோல்வி அடைந்தோம்: ரஹானே
சென்னை அணியின் கடைசி 5 ஓவர்களால் நாங்கள் தோல்வியடைந்தோம். மிகவும் அதிருப்தியாக உள்ளது. முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக தான் ஆடினோம். ஆனால் கடைசி 5 ஓவர்கள் சோதனையாக அமைந்தது. தோனி ஆடும்போது, பந்துவீசுவது சிரமமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களும் பந்தை சரியாக பிடித்து வீச முடியவில்லை. சிஎஸ்கே பந்துவீச்சு நன்றாக இருந்தது. எங்கள் பேட்டிங் சொதப்பி விட்டது. 3 ஆட்டங்களில் சிறப்பாக ஆடியும் தோற்று விட்டோம் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.