உணவு நஞ்சானதில் 43 பேர் வைத்தியசாலையில்!!
மஸ்கெலியா, நல்லதண்ணி லக்ஷபான பிரிவிலுள்ள கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 43 பேர், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லக் ஷபான பிரிவிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில், 8 ஆம் நாள் திருவிழா நேற்று (19) இடம்பெற்றது. இதன்போது, குறித்த கோவிலில் நண்பகல் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டவர்கள் வாந்தி, வயிற்றோட்டம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 07 சிறுவர்கள் அடங்குவதாகவும், வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து மஸ்கெலியா பொதுச் சுகாதார அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
லக் ஷபான பிரிவிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலின் வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில், 8 ஆம் நாள் திருவிழா நேற்று (19) இடம்பெற்றது. இதன்போது, குறித்த கோவிலில் நண்பகல் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டவர்கள் வாந்தி, வயிற்றோட்டம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 07 சிறுவர்கள் அடங்குவதாகவும், வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து மஸ்கெலியா பொதுச் சுகாதார அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை