ஓமந்தை தொழிற்சாலைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்பு என்கிறார் சாள்ஸ்!!

வவுனியா, ஓமந்தையில் அமைந்துள்ள உருக்கு தொழிற்சாலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உள்ள தொடர்பு வெளிவந்துள்ளது.


வவுனியா, வைரவபுளியங்குளத்தில் நேற்று சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா, ஓமந்தை அரச வீட்டுத்திட்ட பகுதியில் அமைந்துள்ள ஈயம் மற்றும் உருக்கு தொழிற்சாலை தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இத்தொழிற்சாலைக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தை தொழிற்சாலை தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியும் அவர் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும்
 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதி உங்களுடைய அமைச்சில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என வினவினார். இதன்போது வவுனியா, ஓமந்தை தொழிற்சாலை குறித்து எழுத்து மூலமான கடிதத்தினூடாக நான் தெரியப்படுத்தியதாகவும்
 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின்போது வவுனியா, ஓமந்தை தொழிற்சாலை குறித்து கதைத்தும்  இது குறித்து மைத்திரிபால சிறிசேன கண்டுக்கொள்ளவில்லை. முக்கியத்துவம் அளிக்கவில்லை. அத்துடன் தன்னுடன் தொடர்புடைய விடயங்களை ஜனாதிபதி மூடிமறைக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.