மெக்ஸிகோ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!!

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பேருந்து ஒன்று குடை சாய்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்ஸிக்கோ தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் இருந்து 40 பயணிகளுடன் டோர்ரியோன் நகர் நோக்கி சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.