ஸ்குவாஷ்: 10 இடங்களுக்குள் நுழைந்தார் செளரவ் கோஷல்!!

உலகின் ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் 10 இடங்களில் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் செளரவ் கோஷல்.

சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளனம் திங்கள்கிழமை வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தில் உள்ளார் சென்னை வீரர் செளரவ் கோஷல். 2018-19 பிஎஸ்ஏ உலக சாம்பியன் போட்டியில் முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். மேலும் ஜூரிச்சில் நடைபெற்ற கிராஸ்ஹூப்பர் கோப்பை போட்டியிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றார். எகிப்தைச் சேர்ந்த உலக சாம்பியன் அலி பராக் முதலிடத்தில் உள்ளார்.
மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 15-ஆவது இடத்தில் உள்ளார்.
ஏற்கெனவே உலகத் தரவரிசைப் பட்டியலில் மகளிர் பிரிவில் முதல் 10 இடங்களில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் இடம் பெற்றிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.