பிரதமரின் பிரதி பிரதானியாக தமிழ் ஊடகவியலாளர்!


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதி பிரதானியாக பிரதீப் அமிர்தநாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பிரித்தானிய நிறுவனமொன்றில் சந்தைப்படுத்தல் பிரிவு, பத்திரிகை, விளம்பரம் மற்றும் நிர்வாகத் துறைகளில் 30 ஆண்டு கால அனுபவமுடையவர். அத்துடன், ஒரு ஊடகவியலாளராகவும், ஒரு கிரிக்கட் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கொழும்பு மேற்கு றோட்ரிக் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் அனுர பண்டாரநாயக்க அறக்கட்டளையின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.