ரஷியாவிடம் இருந்து 5ஆம் தலைமுறை போர் விமானங்களை வாங்க சீனா திட்டம்!!
ரஷியாவிடம் இருந்து 5ஆம் தலைமுறை சுகோய்-57 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
ரஷியத் தயாரிப்பான சுகோய்-57 ரக போர் விமானம்தான், உலகிலேயே மிகவும் அதிநவீன போர் விமானம் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்து வருகிறார். இந்த போர் விமானத்தின் மூலம், வானில் எதிரி நாடுகளின் போர் விமானங்களுடன் சண்டையிடவும், தரையிலும், கடல்பகுதியிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கவும் முடியும்.
இந்த போர் விமானங்களை சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்ய விரும்புவதாக அதை தயாரித்துள்ள ரஷியாவைச் சேர்ந்த ரோஸ்டக் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவன (சர்வதேச மற்றும் பிராந்திய கொள்கை) இயக்குநர் விக்டர் கிளாடோவ் அண்மையில் தெரிவித்திருந்தார். சீனாவிடம் தற்போது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஜே-20 போர் விமானங்களும், ரஷிய தயாரிப்பு சுகோய்-35 ரக போர் விமானங்களும் உள்ளன. இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த விமானங்களை இந்தியா வாங்கினால், இந்தியாவின் விமானப்படை மேலும் வலுவடையும், இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சீனா கருதுகிறது. இதை கவனத்தில் கொண்டு, ரஷியாவிடம் இருந்து சுகோய்-57 ரக போர் விமானங்களை வாங்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனா சொந்தமாக உள்நாட்டிலேயே போர் விமானங்களை தயாரித்து வரும்போதிலும், அந்த விமானங்களுக்கு ரஷியத் தயாரிப்பு என்ஜின்களையே நம்பியுள்ளது. அதேபோல், சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து ஜேஎஃப்-17 தண்டர் எனும் புதிய விமானங்களை உருவாக்கி வருகின்றன. இந்த விமானங்களுக்கும், ரஷியத் தயாரிப்பு என்ஜின்களையே இருநாடுகளும் நம்பியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ரஷியத் தயாரிப்பான சுகோய்-57 ரக போர் விமானம்தான், உலகிலேயே மிகவும் அதிநவீன போர் விமானம் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்து வருகிறார். இந்த போர் விமானத்தின் மூலம், வானில் எதிரி நாடுகளின் போர் விமானங்களுடன் சண்டையிடவும், தரையிலும், கடல்பகுதியிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கவும் முடியும்.
இந்த போர் விமானங்களை சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்ய விரும்புவதாக அதை தயாரித்துள்ள ரஷியாவைச் சேர்ந்த ரோஸ்டக் ஆயுத தளவாட உற்பத்தி நிறுவன (சர்வதேச மற்றும் பிராந்திய கொள்கை) இயக்குநர் விக்டர் கிளாடோவ் அண்மையில் தெரிவித்திருந்தார். சீனாவிடம் தற்போது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஜே-20 போர் விமானங்களும், ரஷிய தயாரிப்பு சுகோய்-35 ரக போர் விமானங்களும் உள்ளன. இந்த சூழ்நிலையில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த விமானங்களை இந்தியா வாங்கினால், இந்தியாவின் விமானப்படை மேலும் வலுவடையும், இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சீனா கருதுகிறது. இதை கவனத்தில் கொண்டு, ரஷியாவிடம் இருந்து சுகோய்-57 ரக போர் விமானங்களை வாங்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனா சொந்தமாக உள்நாட்டிலேயே போர் விமானங்களை தயாரித்து வரும்போதிலும், அந்த விமானங்களுக்கு ரஷியத் தயாரிப்பு என்ஜின்களையே நம்பியுள்ளது. அதேபோல், சீனாவும், பாகிஸ்தானும் கூட்டாக சேர்ந்து ஜேஎஃப்-17 தண்டர் எனும் புதிய விமானங்களை உருவாக்கி வருகின்றன. இந்த விமானங்களுக்கும், ரஷியத் தயாரிப்பு என்ஜின்களையே இருநாடுகளும் நம்பியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை