உக்ரைன் அதிபராகிறார் காமெடி நடிகர்??
உக்ரைன் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், காமெடி நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கிமுன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவர் அந்நாட்டு அதிபராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
உக்ரைன் அதிபர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் காமெடி நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி (41) 30 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்து தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ 17 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து 2ஆம் கட்ட முடிவுகள் வெளியாகும்போது அதிலும் ஸெலன்ஸ்கி முன்னிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் மொத்தம் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றால், உக்ரைன் அதிபராக பொறுப்பேற்பார்.
இல்லையெனில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் தலைவர்கள் இடையே வரும் 21ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
உக்ரைன் அதிபராக இருந்த ரஷிய ஆதரவாளரான விக்டர் யானுகோவிச், உள்நாட்டில் மூண்ட புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து 2014ஆம் ஆண்டில் உக்ரைன் அதிபராக பொரோஷென்கோ பதவியேற்றார். இதனிடையே, உக்ரைனுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, கிரிமியா பகுதியை ரஷியா இணைத்து கொண்டது. மேலும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைனின் எல்லையோர பகுதியை ஆக்கிரமித்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
உக்ரைன் அதிபர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் காமெடி நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி (41) 30 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்து தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ 17 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து 2ஆம் கட்ட முடிவுகள் வெளியாகும்போது அதிலும் ஸெலன்ஸ்கி முன்னிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் மொத்தம் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றால், உக்ரைன் அதிபராக பொறுப்பேற்பார்.
இல்லையெனில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் தலைவர்கள் இடையே வரும் 21ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
உக்ரைன் அதிபராக இருந்த ரஷிய ஆதரவாளரான விக்டர் யானுகோவிச், உள்நாட்டில் மூண்ட புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து 2014ஆம் ஆண்டில் உக்ரைன் அதிபராக பொரோஷென்கோ பதவியேற்றார். இதனிடையே, உக்ரைனுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, கிரிமியா பகுதியை ரஷியா இணைத்து கொண்டது. மேலும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைனின் எல்லையோர பகுதியை ஆக்கிரமித்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், உக்ரைன் அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை