அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டம்!

ஆயிரக்கணக்கான டொலர் மில்லியன்களை முதலீடாக நாட்டுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் இதுவரை 17 டொலர் மில்லியன்களையே கொண்டுவந்திருக்கின்றது.

அதனால் அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கம் பாரியளவில் நாட்டின் காணிகளை வெளிநாடுகளுக்கு கொடுத்து வருகின்றது. முதலீட்டுக்கு என்று இந்தியாவுக்கு 5 ஏக்கர் என்றும் சீனாவுக்கு 15ஏக்கர் என்றும் திருடர் என்று தெரிவித்துவந்த நந்தன குணதிலக்கவுகு 1000 ஏக்கர் காணியும் வழங்கி இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தின் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் மற்றும் அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.