ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் 10 ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல்!!

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அந்த கலந்துரையாடலின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இம் முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் திகதியின் பின்னர் முன்னெடுக்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண மற்றும் பிரசார செயலாளர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய ஆகியோர் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.