பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வைத்தியர்கள் போராட்டம்!


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வைத்தியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும், ஆயிரம் வைத்தியர்கள் இவ்வாறு சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு, அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலும் எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியில், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகளின் 17 சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நிறைவேற்றுச் சேவையாளர்கள் முகம் கொடுக்கும் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்துகொள்வது, இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.