பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்!!


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் முழு விவரமும் வருமாறு :

ஊடக அறிக்கை
06.04.2019 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக 07.04.2019 அன்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் பாலியல் தொந்தரவு பற்றியது என்பது உண்மைக்குப் புறம்பானது. குறித்த சம்பவம் மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடு பற்றியதே என்பதையும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுப்படுத்துகின்றது.

இ. விக்னேஷ்வரன்
துணைவேந்தர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.