பிரான்ஸ் பயணமானார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்!!


இன்று பிரான்ஸ் பயணமானார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்
வருகின்ற 12ம் திகதி பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றதத்தில் நடைபெறப்போகும் சிறப்பு நிகழ்வில்  தமிழர் தாயகத்தின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும்  அவை சார்ந்து சர்வதேசம் ஆற்றவேண்டிய பங்களிப்பு தொடர்பாகவும்
உரையாற்றவுள்ளார்.இதன் மூலம்  தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முயற்ச்சி என ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கிழக்கு மண்சார்ந்து சர்வதேச நாடொன்றின்  பாரளுமன்றத்தில் உரையாற்றவுள்ள முதலாவது நபர் இவர்  என்பதோடு கிழக்கின் தற்போதைய நிலமைகள் தொடர்பாகவும் உரையினில் கவனம் கொள்வார் .சர்தேசம் திசை திரும்பும் என எதிர்பாக்கப் படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.