திடீர்ரென யாழ் கோட்டையை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை.!

யாழ்.கோட்டைக்குள் சந்தேகத்திற்கிடமான 3 போ் நுழைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து கோட்டையை சுற்றிவளைத்துள்ளனா்.


யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையின் உள்பகுதியில் இன்று மாலை சந்தேகத்துக்கு இடமான மூவர் நுழைந்தனர் என்று தகவல் தரப்பட்டது.

அதனடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கோட்டையைச் சுற்றிவளைத்துள்ளனர். அத்துடன், இராணுவத்தினரும் அங்கு விரைந்தனர் என்று பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டது .மேலதிக விபரம் இன்னும் தெரியவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
                           

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.