காவல் துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்தும் போக்கை தமிழக அரசு !!

காவல் துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்தும் போக்கைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.மகேந்திரனை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது மிகவும் வருத்தத்தை விட கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது.
இதற்கு அரசுதான் முழுக் காரணம். பெண்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டிய பாதுகாப்பைக் குறைத்து வருகிறோமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. காவல் துறையை அதன் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல் துறையை, ஏவல் துறையாகப் பயன்படுத்தும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். துடியலூரில் கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் பிரேதப் பரிசோதனை சான்று உள்ளிட்டவற்றைப் பெறுவதற்கு, சிறுமியின் பெற் றோரை அலைக்கழிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
ஏழைகளை இவ்வாறு அலைக்கழிக்கும் போக்கு மாற வேண்டும். ஏழைகளுக்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் அரசு செயல்பட வேண்டாம். அவர்களுக்கு குரல் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் மக்கள் இருக்கின்றனர்.
எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் உண்மையின்படியும், மனசாட்சியின்படியும் பணியாற்றுவார்கள். அவர்கள் மீது குறைகள் இருந்தால், அவை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ராஜிநாமா செய்வார்கள். இது எந்தக் கட்சியும் செய்யாதது என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.