தவறு செய்தவர்களுக்கே வருமான வரி சோதனை திகிலூட்டும்-கமல்!!

தவறு செய்தவர்களுக்கு மட்டுமே வருமான வரி சோதனை திகிலூட்டும் என்றார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியில், மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்துவைத்து கமல்ஹாசன் பேசியதாவது:

மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் மக்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். மக்கள் நீதி மய்யம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமே சான்று. தொடர்ந்து அது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.
இதையடுத்து அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் அமர்ந்து இருந்த தோரணை, நான் பேசியதற்கு அவர்கள் அளித்த பிரதிபலிப்பு நிறைய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எங்களது பேச்சை கடைசி வரை உன்னிப்பாகக் கேட்டதைப் பார்க்கும்போது, மக்கள் நேர்மையை ரசிக்கின்றனர். அதன் சாயல்கள் வாக்குச்சாவடிகளில் தெரியும். புதுவையை புதிய மாநிலமாக மாற்ற, பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.வருமான வரி சோதனை நடத்துவது மிரட்டுவதற்காக என்று சொல்கின்றனர். வருமான வரி சோதனை என்பது தவறு செய்தவர்களுக்கு திகில் ஊட்டக்கூடியவை. வருமான வரி சோதனை செய்தவர்களும், செய்யப்பட்டவர்களும் உத்தமர்கள் அல்லர் என்றார் கமல்ஹாசன்.
இதில், மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத் தலைவரும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் உள்படப் பலர் பங்கேற்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.