பா.ஜ., - அ.தி.மு.க., ஆசை நிறைவேறாது: கனிமொழி!

சென்னை, ''எப்படியாவது துாத்துக்குடியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என, பா.ஜ., - அ.தி.மு.க., வின் ஆசை நிறைவேறாது,'' என, தி.மு.க., வேட்பாளர்,

கனிமொழி கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:நாடு முழுவதும், பா.ஜ.,வுக்கு எதிராக உள்ளவர்கள் மீது, வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புகார் அடிப்படையில், சோதனை செய்வதாக கூறுகின்றனர். ஆளுங்கட்சியினர் மீது புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பது இல்லை. ஆளும், பா.ஜ., தோல்வி பயத்தில், வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது.துாத்துக்குடியில் எப்படியாவது தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்ற, பா.ஜ., - அ.தி.மு.க.,வின் ஆசை என்றும் நிறைவேறாது. தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., - பா.ஜ.,விற்கு எதிரான மனநிலையில் தான், மக்கள் உள்ளனர். அவர்கள் செய்த துரோகத்தை, மக்கள் மறக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.