விருதை குறிவைக்கும் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தற்போது ரசிகர்களின் அபிமான நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து வரும் வாய்ப்புகளால் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


தற்போது பிரதான கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் நரேந்திர நாத் இப்படத்தை இயக்குகிறார். மேலும் அஜய் தேவ்கனின் புதிய படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில், ‘இக்பால்’ ‘டோர்’போன்ற திரைப்படங்களை இயக்கிய நாகேஷ் குக்கனூர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

நாகேஷ் குக்கனூர் இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் ஆதி, ஜகபதி பாபு நடிக்கவுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.