இந்திய தேசிய பாதுகாப்பு குழு இலங்கைக்கு வருகிறதா?

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இந்தியாவிலிருந்து வருகைத்தரவுள்ள குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள் பயங்கரவாத விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆகியோர் உள்ளடங்குவார்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள், இலங்கைக்கு எந்நேரத்திலும் வருகை தருவதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்களின் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.

இதேவேளை அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வேண்டிய உதவிகளை, இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.