மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் புத்தாண்டின் பின் தீர்க்கமான முடிவு!!
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறை மற்றும் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் சகல கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வருமாயின் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியும்.
பொது உடன்பாடு இல்லாமையினாலேயே தேர்தல் தொடர்பில் இன்னும் அரசாங்கத்தரப்பில் உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே புத்தாண்டின் பின்னர் மாகாணசபை தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று உள்ளக,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தன குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு தொடர்பாக அவரிடம் கேட்ட போதே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
அனைத்து தேர்தல்களுக்கும் முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்தும் நிலைபாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதும் மாகாண சபை தேர்தலுக்கான பொது இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளவதில்; பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
மொத்தமாக ஏழு மாகாண சபைகளுக்கான பதவிகாலம் நிறைவுக்கு வந்த நிலைமையில் அனைத்து தரப்பின் ஒத்துழைப்புடன் தேர்தலை நடத்த வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பொது உடன்பாடு இல்லாமையினாலேயே தேர்தல் தொடர்பில் இன்னும் அரசாங்கத்தரப்பில் உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே புத்தாண்டின் பின்னர் மாகாணசபை தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று உள்ளக,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபயவர்தன குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைபாடு தொடர்பாக அவரிடம் கேட்ட போதே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
அனைத்து தேர்தல்களுக்கும் முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்தும் நிலைபாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதும் மாகாண சபை தேர்தலுக்கான பொது இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளவதில்; பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
மொத்தமாக ஏழு மாகாண சபைகளுக்கான பதவிகாலம் நிறைவுக்கு வந்த நிலைமையில் அனைத்து தரப்பின் ஒத்துழைப்புடன் தேர்தலை நடத்த வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை