வாக்குக்காக வீதிக்கு இறங்கிய முதலமைச்சர்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றியடைவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று மக்களின் ஆதரவை திரட்ட ஆரம்பித்துள்ளார்.


சேலத்தில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் நடந்து சென்று, நேற்று (திங்கட்கிழமை) வாக்கு சேகரித்துள்ளார்.

சேலம் பட்டைக்கோவில் தொடங்கி, கடைவீதி, சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று அவர் வாக்கு சேகரித்துள்ளார்.

மேலும் தேர்தல் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அவர் இதன்போது வழங்கியுள்ளார்.

இதேவேளை வியாபாரம் மற்றும் ஏனைய நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, அவ்விடத்திலிருந்த மக்களுடன் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.