தென்கொரியாவில் தேசியப் பேரிடர் நிலை அறிவிப்பு!!

தென்கொரியாவில் தேசியப் பேரிடர் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


தென்கொரிய நகரமான கோசியோங்கில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீ காரணமாகவே அங்கு தேசியப் பேரிடர் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோசியோங்கில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன், கோசியோங்கிலிருந்து வெளியேற மறுத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலைப்பாங்கான பகுதியில் அமைந்திருக்கும் கோசியோங்கில் கடந்த வியாழக்கிழமை முதல் காட்டுத் தீ பரவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.