தாக்குதல் அச்சம்!! வழிபாட்டுகளை நடத்த வேண்டாம் என்கிறார் கொழும்பு பேராயர்!!

இரண்டு இடங்களில் தாக்குதல் நடக்கலாம் என்ற படையினரின் எச்சரிக்கையை தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னதாக 5 ஆம் திகதி ஞாயிறு ஆராதனைகள் நடக்குமென பேராயர் அறிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

அதன்படி நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேவ ஆராதனைகள் நடத்த வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஆராதனைகளை நடத்துவதை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.