தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த பி.ஜே.பி!!

பிரதமர் மோடியை `களவாணி’ என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்த சர்ச்சையே இன்னும் ஓயாமலிருக்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தோடு மோடியைச் சம்பந்தப்படுத்தி ஸ்டாலின் பேசியிருப்பது பி.ஜே.பி.யினரை கொதிப்படையச் செய்துள்ளது.
மே 19ம் தேதி நடைபெறவிருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்காக, மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி. இளைஞரணியின் மாநில துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா, ``கடந்தாண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்று, 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி, ஓட்டபிடாரத்தில் நடைபெற்ற தி.மு.க. பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டதே பிரதமர் மோடிதான் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஒரு விவகாரம் நிலுவையில் உள்ளபோது, பொய்யான ஒரு குற்றச்சாட்டை, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கூறுவது சட்டப்படி குற்றமாகும். `அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டை எந்த அரசியல் கட்சியின் மீதும் தெரிவிக்கக் கூடாது' என்று தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் இணைப்பு 5 தெளிவாக வரையறுத்துள்ளது. ஸ்டாலினின் ஓட்டப்பிடாரம் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். ஸ்டாலினின் இந்தப் பேச்சை, அவரது அதிகாரபூர்வ ‘யூ டியூப்’ பக்கத்திலும் லைவ்வாக ஒளிபரப்பியுள்ளனர்.

அந்த வீடியோ காட்சிகளை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் காட்டினோம். தங்களது பேச்சுகளுக்காக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணிநேர தடை, மாயாவதிக்கு 48 மணிநேர தடையை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. இதன்படி, நடைபெறவிருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்'' என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.